“இந்த ஜென்மத்தில் இருந்து நான் விடைபெறுகிறேன்” என எழுதி விட்டு 7 நாட்களில் இவ்வுலகை விட்டு பிரிந்த 8 வயது சிறுவன்

319 0

இந்த ஜென்மத்தில் இருந்து நான் விடைபெற போகிறேன் என சுவற்றில் எழுதி விட்டு 7 நாட்களில் இவ் உலகை விட்டு பிரிந்த 8 வயது சிறுவன் தொடர்பான கவலையான செய்தி அக்குரஸ்ஸ பிரதேசத்தில் தெரியவந்துள்ளது.

அக்குரஸ்ஸ – திப்போடுவாவ ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த டீ.கெஷாரா வனமந்த மித்சுகு என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுவன் தனது வயதை மீறி மேற்கொண்ட விசித்திர விடயங்களால் உறவினர்கள் மற்றும் அம் மாணவன் கற்றுவந்த பாடசாலையின் ஆசிரியர்களுடன், அவனது நண்பர்களது கவனத்திற்கும் உள்ளாகியுள்ளான்.

விபத்து இடம்பெற்ற நாள் பாடசாலையில் இருந்து செல்லும் போது தனது நண்பர்களிடம் தான் திருமண வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளான்.

எனினும் இந்த சிறுவன் அன்றைய தினம் தனது பெற்றோருடன் திருமண வீட்டுக்கு சென்று திரும்பி வரும் போது திடீரென ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்துள்ளான்.

மேலும் தனது மரணத்திற்கு 7 நாட்களுக்கு முன்னர், தான் உறங்கும் கட்டிலுக்கு அருகில் உள்ள சுவற்றில் எழுதி, ஏடுகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வசனங்கள் மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.

அந்த வசனங்கள் கீழே..

“இந்த ஜென்மத்தை விட்டு நான் போகிறேன். நான் இன்னும் சில தினங்கள் மாத்திரமே உயிர் வாழ்வேன். நான் சொர்க்கத்திற்கு செல்கிறேன். இது உண்மையாலும் ஒரு நரகம். நாம் நல்ல வேலை செய்வோம். நல்ல பிள்ளை ஆகுவோம்.

என அந்த சிறுவனின் கிறுக்கல்கள் அமைந்துள்ளது.