சவப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம்: போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் நால்வர் நீதிமன்றில் ஆஜர்

282 0

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக சவப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பட்டதாரிகள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதனையடுத்து, அவர்கள் நால்வரையும் தலா 10 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவிட்டார்.

அத்துடன், இது தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பட்டதாரிகளின் போராட்டத்தின் போது மாவட்ட செயலக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.