உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொகுதிமுறையில் – ஜனாதிபதி உறுதி

509 0

maithri2016040204எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொகுதி முறையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் ஜனாதிபதியை நேற்றைய தினம் சந்தித்தனர்.

இதன்போதே ஜனாதிபதியினால் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம், முதல் காலாண்டு பகுதியில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கட்சியை வலுப்படுத்தி கொள்வதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி மேற்கொள்ளுமாறும் அதற்கான ஆதரவை தாங்கள் வழங்குவதாகவும் தொகுதி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.