காஷ்மீர் வன்முறை – மத்திய, மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

382 0

201607200427443044_Kashmir-unrest--NHRC-issues-notice-to-MHA-JK-Govt_SECVPFகாஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானியும், அவரது ஆதரவாளர்களும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வன்முறை மற்றும் காவல்துறையினாின்  துப்பாக்கி சூட்டில் பலர் பலியானார்கள்.

பலர் காயம் அடைந்து உள்ளனர்.

காஷ்மீர் வன்முறை சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் காஷ்மீர் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது