வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்

94 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (11) வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ்மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் , வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாடசாலை மாணவர், பொதுமக்கள் என பலரும் கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டனர்.