சாரதி அனுமதிப்பத்திரமின்றி பஸ் வண்டியை செலுத்தியவர் கைது

81 0

சாரதி அனுமதிப்பத்திரமின்றி கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி இ.போ.ச. பஸ் வண்டியை செலுத்தியவரை கொழும்பு  – கண்டி பிரதான வீதியின் பஸ்சியால பகுதியில் நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் ஜா-எல டிப்போவுக்கு சொந்தமான குறித்த பஸ் வண்டியை, அஜாக்கிரதையாக செலுத்துவதை அவதானித்த, நிட்டம்புவ போக்குவரத்து பிரிவு பொலிஸார் பஸ் வண்டியை வழிமறித்து, சோதனையிட்டபோது  சாரதி அனுமதிப்பத்திரமின்றி, பஸ் வண்டிய செலுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பஸ் வண்டியை பொலிஸார் கைப்பற்றியதுடன், அதிலிருந்து பயணிகள்  வேறொரு பஸ் வண்டிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

நேற்று(10) பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், பஸ் வண்டியை பொலிஸார் கைப்பற்றியதுடன், அனுமதிப்பத்திரமின்றி பஸ் வண்டியை செலுத்தியவரையும் கைது செய்திருந்தனர்.

கைது  செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.