கம்பளையில் 5 நாட்களாக காணாமல் போன யுவதியை தேடும் பணியில் பொலிஸாரும் பிரதேச மக்களும்!

100 0

வீட்டை விட்டு வெளியேறி  பணியிடத்துக்குச்  சென்ற யுவதி ஒருவர்  ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய மற்றும் மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகள் , வனப்பகுதிகளில் யுவதியைத் தேடும் நடவடிக்கையை கிராம மக்களும் கம்பளை பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முனவ்வாரா  என்ற யுதியே காணாமல் போயுள்ளார்.

அவர் கெலிஓயாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிவதாக அவரது சகோதரர் மொஹமட் இம்ரான்   தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக பாத்திமாவின் தாயார் சித்தி சாஹிரா கூறுகிறார்.