நெஞ்சிலெரியும் தீபங்கள்! -இரா. செம்பியன்-

208 0


சுதந்திரத்திற்காய்
ஏந்திய தீபங்கள்
நெஞ்சமெல்லாம்
நிறைந்தெரிகிறது….!

செங்குருதியால்
தேசத்தின் எல்லையை
வரைந்து நின்றவர்கள்
வாழ்கின்றனர்
நெஞ்சிலெரியும்
தீபங்களாய்…!

ஒன்றாகிப் பத்தாகி
நூறாகிப் பலவாகிய
தீபங்களின்
பிரசவிப்புக்கள்
அனல் கொண்டு
வீசுகின்றது
நெஞ்சமெல்லாம்
நெருடுகின்றது…!

வலி நிறைந்த
கள வாழ்விலும்
சுமை கொண்ட
இலக்கின் நகர்விலும்
சிரித்தபடியே
சுகமான சுமையாக்கி
மரணத்தை அணைக்கையில்
நம்பிக்கை குலையாது
சுவடுகள் அழியாது
வீச்சோடு எழுந்தே
விடிவை நோக்கியது…!

தேசமே தன்
நேசிப்பின் குடும்பமாக
தலைவனே நல்
அறத்தின் திசையாக
விடுதலையே தனை
இயக்கும் மூச்சாக
இடர் கண்டு
கொடும் பகை வென்று
எரிகின்றன எம்முள்
சுடர்விடும் தீபங்களாய்.

இரா.செம்பியன்