யாழ்ப்பாணம் – இளவாலை – மாதகல் பகுதியில் 60 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த போதைப் பொருள் தொகுதி படகு ஒன்றில் கொண்டுவரப்பட்டு, கரையில் இறக்கப்பட்ட வேளையில், காவற்துறை விசேட குழு ஒன்று அதனை மீட்டுள்ளது.
குறித்த போதைப் பொருள் கடத்தல்களுடன் பாாிய வலைமைமைப்பு ஒன்று தொடர்பு கொண்டுள்ளதாகவும், இந்த குழுவினை கைது செய்ய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.