தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

392 0

Daily_News_6180492639542இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய ராஜ்யசபாவில் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற ராஜ்யசபா அமர்வின் போது இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டது.

இலங்கையில் தற்போது 70க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நூறுக்கும் அதிகமான படகுகளும் தடுப்பில் உள்ளன.

இந்த நிலையில், மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க இந்திய அரசாங்கம் ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் திராவிடமுன்னேற்றக் கழகம் என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.