பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலத்தை 03மாத காலத்திற்கு நீடிக்க அனுமதி

99 0

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவி காலத்தை 03 மாத காலத்திற்கு நீடிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் சனிக்கிழமை (01) அரசியலமைப்பு பேரவை கூடியது.

இதன்போது சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவு பெறும் நிலையில் இருந்தது.

இவ்வாறான பின்னணியில் பொலிஸ் மா அதிபராக மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நியமிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

அடுத்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் என்ற செய்தி வெளியானதும் அரசியல் தரப்பில் கடும் எதிர்ப்புகள் வெளியாகின.

மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் இல்லாத,மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமியுங்கள் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது.

இவ்வாறான பின்னணியில்  பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவி காலத்i03 மாத காலத்திற்கு நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்து,அதனை அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்தார்.