களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது கடந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரியொருவரின் காலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது.
அது, இன்று மேற்கொள்ளபட்ட சத்திர சிகிச்சையின் போதாகும்.
குறித்த அதிகாரியின் இடது காலின் முழங்காலுக்கு கீழ் பகுதி இவ்வாறு அகற்றப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் பலியானமை குறிப்பிடத்தக்கது.