அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் குறைந்த வருமானம் பெறும் மக்கள் பாதிப்பு – ஜனாதிபதி

247 0
தனிப்பட்ட ஒழுங்குப் பத்திரத்துக்கு அமைய அரசியல்வாதிகள் செயற்படுவதால் குறைந்த வருமானம் பெறும் மக்கள் பாதிப்படைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போராட்டம் செய்கின்றவர்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் மீது  குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஊடகங்களும் வாய்ப்பளிக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்துகின்றபோது, மக்கள் தமது ஊடகத்தின்பால் கவரப்படுவதாக குறித்த ஊடகப் பிரதானிகள் தெரிவிக்கின்றனர்.
விமர்சனம் என்பது ஜனநாயக உரிமையாகும்.
ஆனால், நாட்டை அழிப்பதற்காக அதனை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்