செய்ட் ராட் அல் ஹுஸைன் , மங்கள சந்திப்பு

342 0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைனை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு ஜெனிவாவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது விளக்கமளித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் கடந்த 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் ஆரம்பமானது.
இதன்போது உரையாற்றிய மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், இலங்கை தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் பிரஸ்தாபிக்க வில்லை.
எனினும், இலங்கை தொடர்பான தமது அறிக்கையை மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.