மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் பலி

86 0
கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று மாலை உயிரிழந்ததாக தெல்லிப்பழை போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ் மாதுசன் வயது 18 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான மின்வடத்தில் இருந்து மின்சாரம் இவரை தாக்கி உள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.