சுமந்திரன் மீதான கொலை முயற்சி: சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு

261 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலையும், எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிக்க, கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று (27) உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டு, ஐவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இன்றைய தினம், கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே, அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.