யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம்: கூட்டமைப்பு அதிர்ச்சி

371 0

tna-450x225யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் தொடர்பிலும், முன்னெச்சரிக்கையாக சில மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியியேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவலையடைவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் சமூகங்களுக்கு இடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக மாத்தரமே நாட்டில் இவ்வாறான விடயங்களை தடுக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கலகத்தில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்கள் மீள ஏற்படுவதை அனுமதிக்க கூடாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்களை வரவழைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஏனைய மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.