அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – மூன்று காவல்துறையினர் பலி

555 0

1467964351-4314அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேர் பலியாகினர்.
இனந்தெரியாதவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கருப்பின மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் டல்லஸ் நகரத்தில் ஒரு கருப்பினத்தவரால் 5 காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், லூசியானாவில் நேற்று மேலும் மூன்று காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.