அரசாங்க மானியங்களைப் பெறுவதற்காக 34 இலட்சம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் !

207 0

அரசாங்க மானியங்களைப் பெறுவதற்கு 34 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்களை கவனமாக ஆராய்ந்து பொருத்தமானவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த மானியம் வழங்கப்படும் என தெரிவித்த அவர், தற்போது வழங்கப்படும் அரசாங்கத்தின் மானியங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தொடரும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.