இன்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் 75வது பிறந்தநாள்!

119 0

கொழும்பு பேராயர் மேல்கம் கர்தினால் ரஞ்சித்தின் 75வது பிறந்தநாள் இன்று (15) கொண்டாடப்பட்டது.

கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலை நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வில் கொழும்பு உதவி ஆயர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

75 வயதை எட்டியதும் பேராயர் தனது பதவியை இராஜினாமா செய்வது ஒரு பாரம்பரியம், எனவே இது தொடர்பான கடிதத்தை திருத்தந்தைக்கு அனுப்ப புனித கர்தினால் ரஞ்சித் ஏற்பாடு செய்துள்ளார். எவ்வாறாயினும், திருத்தந்தையின் பதில் கிடைக்கும் வரை, மெல்கம் கர்தினால் ரஞ்சித் பேராயராகத் தொடர்வார்.