அநுராதபுரத்திலிருந்து பெலியத்த சென்ற ரயிலில் எரிபொருள் கசிவு !

116 0

அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்துக் கொண்டிருந்த  ரஜரட்ட ரெஜின ரயிலின் இயந்திரத்தில்  ஏற்பட்ட  எரிபொருள் கசிவு காரணமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளது.

பொத்துஹெர ரயில்  நிலையத்துக்கு  அருகிலேயே இந்த  எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரமணாக இன்று (15) காலை 10.20 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைய வேண்டிய இந்த ரயில் பகல் 12.04 மணியளவிலேயே  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

ரயிலை முறையாக பராமரிக்காததாலேயே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.