காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர

125 0

யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விஜயம் மேற்கொண்டிருந்தார்.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்வற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்ந்ததுடன், மேலும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும், அவற்றில் உள்ள சவால்கள் தொடர்பிலும் அங்கிருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தார்.

முன்னதாக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

பின்னர், அங்கிருந்து பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டு, விமான நிலையத்தை இயக்குவது தொடர்பிலும், மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பிலும் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.