புத்தளம் ரயில் பாதையில் கனரக வாகனத்தை மோதிய ரயில் !

107 0

புத்தளம் ரயில் பாதையில் குரன ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக அந்தப் பாதையில் குரனவுக்கும் நீர்கொழும்புக்கும் இடையிலான  மார்க்கத்தில்  ரயில்கள் பயணிப்பதில் தாமதம் ஏற்படடுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இன்று செவ்வாய்க்கிழமை ( நவ. 15) காலை 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை  ரயில் நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், குரன  ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கடவையின் ஊடாக பயணித்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.