கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் அண்மையில் இடம்பெற்ற மோதலின்போது தப்பிச் சென்ற கைதிகளில் 13 பேர் இதுவரை சரணடையவில்லை என பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த 6ஆம் திகதி இரவு ஏற்பட்ட மோதலின் சுமார் 100 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் பெரும் எண்ணிக்கையானோர் சரணடைந்தனர்.
குறித்த மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்குள்ளான 215 கைதிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.