அஹூங்கல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் சுட்டுக் கொலை!

134 0

நேற்றைய தினம் அஹூங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது விசேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் அஹூங்கல்ல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, காயமடைந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் சில நிமிடங்கள் பிரதான சாலையில் போராடி, பின்னர் அவரது பிடியில் இருந்து தப்பினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.