தமிழ் மக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – அனுரகுமார திஸாநாயக்க

373 0

download-39தமிழ் மக்களுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க யாழ் மாவட்ட வணிகர் கழகத் தலைவர் மற்றும் உறப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தக் கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள் விடுதலை முன்னணியானது, மக்களின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டஓர் அரசியல் கட்சியாகும்.

இதனால் தமிழர்கள் தமது நியாயமான போராட்டங்களையும் கருத்துக்களையும் முன்வைப்பதற்கும், உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய திசைகளை நோக்கிய செயற்பாடுகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில், தமிழ் மக்களின் காணிப் பிரச்சனைகள், மீள் குடியேற்றம் மற்றும் காணாமல்போனோர், அரசியல் கைதிகள் விடுதலை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக வணிகர் கழகத்தினர் தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.