நாடளாவிய ரீதியில் இன்று லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது!

141 0

கொழும்பு மாத்திரமல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, வெளிமாவட்டங்களுக்கு 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகக்கப்டவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் இன்று 50 ஆயிரம்  எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.