இலங்கை நிலவரம் – ஐநா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளது என்ன?

201 0

ஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலவரத்தை நான் உன்னிப்பாக ; அவதானித்துக்கொண்டிருக்கின்றேன் . மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம்.

அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான சமரச மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.