கோட்டாபயவின் அதிகாரங்களை ரணிலிடம் ஒப்படைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

154 0

13 ஜூலை 2022 முதல் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றுவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச நேற்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறி சென்ற பின்னர் இன்று காலை ஜனாதிபதியின் கடிதமொன்றின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் அதிகாரங்களை ரணிலிடம் ஒப்படைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது | Special Gazette Notification Was Published