ரணில் பதில் ஜனாதிபதி : ஜனாதிபதி எனக்கு அறிவித்தார் என்கிறார் சபாநாயகர்

137 0

அரசியலமைப்பிற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி தனக்கு அறிவித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இது குறித்த சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமையால் அரசியலமைப்பிற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் 37 (1) சரத்திற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.