கோட்டாவை நாட்டைவிட்டு வெளியேற்றுமாறு மாலைதீவில் ஆர்ப்பாட்டம்

153 0

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி, மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையை சேர்ந்தவர்களும், மாலைதீவை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கனின் கடும் எதிர்ப்பு  போராட்டங்களை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட விமானப்படை விமானம் மூலம் மாலைதீவை சென்றடைந்துள்ளார்.  ஜனாதிபதியுடன் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ உட்பட இரு பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவை சென்றடைந்ததையடுத்து அவரை உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி மாலைதீவு வாழ் புலம்பெயர் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இவர்களும் மாலைதீவு மக்கள் – இலங்கை மக்களுடனேயே இருக்க வேண்டும். எனவே ராஜபக்ஷாக்களுக்கு பாதுகாப்பளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.