ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூர் பயணிக்க மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய

142 0

மாலைதீவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மாலைதீவின் வெலனா விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அவர்கள் அங்கிருந்து பிரிதொரு நாட்டுக்கு செல்வதற்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
<p>குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூர் நோக்கி பயணிக்க தயாராகி வருவதாக வெலனா விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன.

அதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமது நாட்டுக்குள் அனுமதித்து தேவையாக ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மாலைதீவு தரப்பில் விருப்பம் காண்பிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.