3,000 பஸ்கள் இன்று ஓடவில்லை

190 0

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்றைய தினம் அனைத்து மாகாணங்களிலும் தனியார் பஸ் சேவைகளின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய  தினம் சுமார் 3000 பஸ்கள் அன்றாட போக்கவரத்து சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக   அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜிதகுமார தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து சபையின் கட்டுபாட்டின் கீழ்  அனைத்து மாகாண தனியார் பஸ்கள் 3200 காணப்படும் நிலையில், இன்று 200 பஸ்களே சேவையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.