தென்மாராட்சியில் புதிய கோவிட் நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி – சாவகச்சேரி பணிமனை எல்லைக்குட்பட்ட அல்லாரை மற்றும் கைதடி பகுதியிலேயே இருவர் நேற்று(11) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நோய் தொற்றாளர்கள் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவு அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பேருந்து, புகையிரதம் உள்ளிட்ட இடங்களில் நெரிசல் நிலைமை அதிகரித்துள்ளது.
அதனால் கோவிட் மேலும் தீவிரமடையக்கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் தென்மராட்சியில் அதிக கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.