ரணில் இல்லையென்றால் கோட்டாபய எப்போதோ விலகியிருப்பார்: எம்.ஏ சுமந்திரன்

237 0

ரணில் இல்லையென்றால் கோட்டாபய எப்போதோ விலகியிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும் இரா.சாணக்கியனும் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(12) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க ஓடிவந்து எற்றுக்கொண்டார்.

ரணில் அவ்வாறு செய்திருக்கவில்லையெனில் இரு மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்‌ச விலகியிருப்பார்.

எனவே ஒருநாளேனும் ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம்.

அத்துடன், போராட்டக்காரர்களின் கருத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஒத்துப்போகின்றது” என சாணக்கியனும் தெரிவித்துள்ளார்.