மஹிந்த – பசில் உள்ளிட்ட குழுவினர் தொடர்பான பிரேரணை

135 0

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்‌ஷ்மண் உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.