ஊடக அடக்கு முறை , ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக முன்றலில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு தமது கண்டனங்களை தெரிவித்தனர்.