சஜித் அல்லது டலஸ் ?

121 0

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெருமவை ஜனாதிபதியாக நியமிக்கவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் எந்தவித பிரிவும் அற்ற விதத்தில் கருத்தொருமைப்பாட்டுடன் இருவரில்ஒருவரை ஜனாதிபதியாக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.நேற்றுமாலை தலதா அத்துக்கோரளையின் நுகேகொட இல்லத்தில் இது தொடர்பானவிசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அனுரபிரியதர்சன யப்பா தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற குழுவினர்ஒன்பது கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

ஒருவரை ஜனாதிபதியாகவும் மற்றையவரை பிரதமராகவும் நியமிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.