இலங்கை நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – சர்வதேச நாணயநிதியம்

120 0

இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமைக்கு தீர்வு காணப்படும் ;என எதிர்பார்க்கின்றோம்அது சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான திட்டம் தொடர்பில் இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கும் என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் இலங்கையின் நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை தொடர திட்டமிட்டுள்ளதாகவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் காணப்படும் பொருளாதார நெருக்கடி பொதுமக்களின் மீது ஏற்படும் தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் குறிப்பாக வறியவர்கள் நலிந்த நிலையில் உள்ளவர்கள் மீதான தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியம் தனது கொள்கைகளின் அடிப்படையில் இலங்கைக்கு உதவுவதற்கான அர்ப்பணிப்பை தொடர்ந்தும் வெளியிட்டுள்ளது.