தீமூட்டுவது சொத்துக்களிற்கு சேதமேற்படுத்துவது அமைதியான ஆர்ப்பாட்டங்களின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்- இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

112 0

ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் பொருளதாரத்தி;ற்கும் பொதுமக்களிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்;துள்ளது.

பொதுமக்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏனையவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்கவேண்டாம் எனவும வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீமூட்டுவது சொத்துக்களிற்கு சேதமேற்படுத்துவது அமைதியான ஆர்ப்பாட்டங்களின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.