போராட்டங்களின் போது ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல் கவலைக்குரியது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் மிக முக்கியமானது. வன்முறையைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன், என பிரதமர் இதன்போது தெரிவித்தள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்ட கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.