தடைகளைத் தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை நெருங்கியது மக்கள் படை

188 0

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி , கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள்  சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர் தற்போது ஜனாதிபதி மாளிகை முன்றலை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகை அருகில் இருந்த தண்ணீர் பீய்ச்சியடிக்கும் 2 வண்டிகளை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் , அதனை பயன்படுத்தி பாதுகாப்புத் தரப்பினர் மீது தண்ணீர் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.