ஊரடங்கை மீளப்பெறுக: மனித உரிமை ஆணைக்குழு

128 0

பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீளப் பெறுமாறு பொலிஸ் மா அதிபருக்கு  மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது..

நாட்டின் தற்போதைய நிலையில் சட்டவிரோதமான முறையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அணிவகுப்பைத் தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு தவறியுள்ள அரசாங்கம்  சட்ட விரோதமான முறையில்  செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே நாட்டின் தற்போதைய  நிலையில் நேரடிய செய்யமுடியாத விடயங்களை மறைமுகமாக செய்வதறகு முயற்சிப்பதாகவும்   மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.