சட்டவிரோதமானது ஊரடங்கு: சட்டத்தரணிகள் சங்கம்

101 0

நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

பொலிஸ் கட்டளைச்சட்டத்தில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையானது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.