மக்கள் பொலிஸ் ஊரடங்கை கவனத்தில் எடுக்க வேண்டாம்-ஜே.வி.பி,

214 0

வெவ்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் போராட்டங்களை முடக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,

வெவ்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் போராட்டங்களை முடக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது . எவ்வித அடிப்படை காரணமும் இன்றி ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொலிஸ்மா அதிபருக்கும் இல்லை.  எனவே மக்கள் இதனை கவனத்தில் கொள்ளத்தேவையில்லை  என தெரிவித்துள்ளார்.