ஊரடங்கு உத்தரவிற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் ஆட்சேபணை

141 0

மேல்மாகாணத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் ஆட்சேபணை வெளியிட்டுள்ளது.

பொலிஸ் சட்டத்தில் அவ்வாறான  ஊரடங்கை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்ன அடிப்படையில் உத்தரவை பிறப்பித்தார் என பொலிஸ்மா அதிபரை கேட்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.கருத்து சுதந்திரத்தையும் உடன்பட மறுப்பதற்கான சுதந்திரத்தையும் முடக்குவதற்காகவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது இது ஏற்றுக்கொள்ள முடியாதது ஜனநாயகத்திற்கு விரோதமானது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அரசியலிற்கும் இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.