அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள மத்திய வங்கிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஆரம்பமாகியிருந்தது.
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றையதினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர்.
இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தினை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க நிராகரித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.