தனிநபரிடம் இருந்து மீட்கப்பட்ட 6800 லீற்றர் டீசல் அத்தியாவசிய சேவைகளுக்காக கையளிப்பு

190 0

தனிநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 6800 லீற்றடர் டீசல் அத்தியாவசிய சேவைகளிற்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி நீதிமன்றினால் குறித்த எரிபொருள் (08) இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திப் பகுதியில் கடந்த வாரம் சட்டத்திற்கு முரணாக கையிருப்பில் வைத்திருந்த டீசல், பெற்றோல் மற்றம் மண்ணெண்ணையே இவ்வாறு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டு அத்தியாவசிய சேவைகளிற்காக பயன்படுத்த கையளிக்கப்பட்டது.

அதற்கு அமைவாக இன்றைய தினம் 12.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற பதிவாளரை சந்தித்து குறித்த எரிபொருட்களை பெற்றுக்கொண்டனர் .