தனியார் மருந்தகங்கள் அனைத்தும் நாளை மூடல்

155 0

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருந்தகங்கள் நாளை சனிக்கிழமை மூடப்படும் என்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கான தீர்வினை விரைவில் காணுமாறு வலியுறுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் நிறைவேற்றுகுழு கூட்டம் இன்று 08 ஆம் திகதி கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.