நாளை முதல் இலங்கைக்கு வரும் கப்பல்கள்!

117 0

40,000 மெற்றிக் தொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (09) இரவு இலங்கையை வந்தடைய உள்ளது.

இதேவேளை, குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரம் அடுத்த 2 நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கமைய உரக் கப்பல்கள் வந்த பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விளைநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பெரும்போக பருவத்திற்கு தேவையான உரம் வழங்கும் வேலைத் திட்டத்திற்கு தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.